நம்பிக்கை எனும் நாதங்கள்தனை
நாவினில் வைத்து சுற்றுதே பூமி
இங்கு நல்லவர் கெட்டவர் யாரென்று
தேடமுன் போகுதே ஆவி
பேச்சிலும் மூச்சிலும் யோக்கியம்
நாமென்று போடுதே சாவி
புத்தனும் காந்தியும் மொத்தமும்
நாமென்று ஆடுதே காவி
பாசங்கள் வைத்தவர் நெஞ்சிலே
ஏறித்தான் நடக்கிறாய் பாவி
வார்த்தையும் வாழ்க்கையும் ஒன்றில்லை
என்றுதான் காட்டுறாய் தாவி
பொய்களும் மெய்களும் பொறுப்பற்றுப்
போனதால் சாய்கிறேன் வாடி
நாய்களும் பேய்களும் நாட்டியம் ஆடுதே
இங்கே பூ மழை தூவி
நீ நல்லவர் என்று நான் ஊரெல்லாம்
சொன்னதால் நிற்கிறேன் கூனி..!
நாமென்று போடுதே சாவி
புத்தனும் காந்தியும் மொத்தமும்
நாமென்று ஆடுதே காவி
பாசங்கள் வைத்தவர் நெஞ்சிலே
ஏறித்தான் நடக்கிறாய் பாவி
வார்த்தையும் வாழ்க்கையும் ஒன்றில்லை
என்றுதான் காட்டுறாய் தாவி
பொய்களும் மெய்களும் பொறுப்பற்றுப்
போனதால் சாய்கிறேன் வாடி
நாய்களும் பேய்களும் நாட்டியம் ஆடுதே
இங்கே பூ மழை தூவி
நீ நல்லவர் என்று நான் ஊரெல்லாம்
சொன்னதால் நிற்கிறேன் கூனி..!

No comments:
Post a Comment