Monday, 13 March 2017

வேஷங்களும் மோசங்களும்


நம்பிக்கை எனும் நாதங்கள்தனை
நாவினில் வைத்து சுற்றுதே பூமி


இங்கு நல்லவர் கெட்டவர் யாரென்று
தேடமுன் போகுதே ஆவி



பேச்சிலும் மூச்சிலும் யோக்கியம்
நாமென்று போடுதே சாவி


புத்தனும் காந்தியும் மொத்தமும்
நாமென்று ஆடுதே காவி


பாசங்கள் வைத்தவர் நெஞ்சிலே
ஏறித்தான் நடக்கிறாய் பாவி


வார்த்தையும் வாழ்க்கையும் ஒன்றில்லை
என்றுதான் காட்டுறாய் தாவி


பொய்களும் மெய்களும் பொறுப்பற்றுப்
போனதால் சாய்கிறேன் வாடி


நாய்களும் பேய்களும் நாட்டியம் ஆடுதே
இங்கே பூ மழை தூவி


நீ நல்லவர் என்று நான் ஊரெல்லாம்
சொன்னதால் நிற்கிறேன் கூனி..!

No comments:

Post a Comment