Thursday, 28 April 2016

கள்வனை திருடிய கள்ளி நீயடி

தொல்லைகள் இருந்தும்
எம் எல்லைகள் தாண்டி
முல்லைகள் பூக்குதே


யன்னல்கள் அடைத்தும்
மின்னல்கள் துளைத்து
கொள்ளைதான் போனதே



மின்னலாய் வந்தவள்
யன்னலில் நின்று தான்
உன் வெண்ணிலா என்றதே


கண்ணிலே கண்டதும்
கைகளில் ஏந்திட நான்
காரணம் தேடினேனே


என் கள்வன் நீ தானடா
காரணம் ஏனடா உந்தன்
கள்ளி நானென்கிறாளே


விண்ணிலே பார்த்ததை
மண்ணிலே கண்டதும்
அள்ளி நான் சூடிக்கொண்டேன் !

No comments:

Post a Comment