Thursday, 2 August 2012

சிடுசிடுக்கும் சிறுக்கியவள் ..!***


குறுகுறுத்த பேச்சினாலே
குதுகலிக்க வைத்தவளே
அறிவாக இருந்தும் அவள்
அறியாமை படமெடுக்க
வெடுவெடுத்த கோபம்கொண்டு

படபடத்து வெடிப்பவளே
திடுதிடென்று முடிவெடுத்து
கடகடென்று முடித்துவிட்டு
சடசடறென்று கண்கலங்கி
கொளகொளென்று அழுதுகொண்டு
குடுகுடென்று ஓடி வந்து
மளமளென்று கதைகள் சொல்லி
திருதிரென்று முழிப்பவளே, நான்
உன்மேல் சிடுசிடுத்துக்கொண்டாலும்
புறுபுறுத்து நடந்தாலும் உன் பளபளத்த
அன்பு என்னை தொளதொளக்க
வைத்துவிட்டு விறுவிறென்று தேடிவந்து
உனை தொட்டணைக்க சொல்லுதே
எனை கட்டியழச் செய்யுதே............. !!!

No comments:

Post a Comment