Saturday, 11 August 2012

கவிஞர்களின் தயவு நாடி தவிக்கின்றேன் ..!***



கவியரசர் கண்ணதாசனின் கல்லறையில்
நின்று நான் கண்ணீர் வடிக்கின்றேன்
எனக்கு கருணை காட்டு என்று,
வாலிபக்கவி்ஞர் வாலியிடம் சென்று நான்
வாழ்த்தச்சொல்லி கெஞ்சுகின்றேன் எனக்கு
கவிவடிக்க வார்த்தைகள் வேண்டுமென்று
புலமைப்பித்தனிடம் புலம்பி தவிக்கின்றேன்
என் கவிதைக்கு புதுக்கரு கொடுவென்று
வைரமுத்துவின் வாசலில் தவம் புரிகின்றேன்
என் சொத்தானவளுக்கு ஒரு முத்தான கவிதொடுக்க
வரம் கொடு கவியரசே கவிப்பேரரசே என்று
என்னவளே நீ தினம் தினம் புதிதாகப் பிறக்கிறாயே
நான் உன்னை கவிபாட என்னுள் வார்த்தை இல்லையடி..!!!

No comments:

Post a Comment