உன் அஞ்சனவிழிகளில் கதைபல பேசிடும்
கயல்மீன்கூட்டம்
உன் மாதுளைச்சிரிப்பினை பார்த்ததும்
மயங்கிடும் மான்கூட்டம்
உன் தாமரை இதழ்களை தந்தவர் யாரென
தயங்கியே நின்றிடும் மயில்க்கூட்டம்
உன் கைவிரல் தீண்டவே இசை பல வீசவே
கலங்கியே நின்றிடும் யாழ்கூட்டம்
உன் கார்குழல் கூந்தலில் கவிதைகள் ஆயிரம்
கயல்மீன்கூட்டம்
உன் மாதுளைச்சிரிப்பினை பார்த்ததும்
மயங்கிடும் மான்கூட்டம்
உன் தாமரை இதழ்களை தந்தவர் யாரென
தயங்கியே நின்றிடும் மயில்க்கூட்டம்
உன் கைவிரல் தீண்டவே இசை பல வீசவே
கலங்கியே நின்றிடும் யாழ்கூட்டம்
உன் கார்குழல் கூந்தலில் கவிதைகள் ஆயிரம்
விடித்திட துடித்திடும் கவிக்கூட்டம்
உன் காதடி ஓரத்தில் மின்னிடும் வேர்வைகள்
கண்களை மயக்கிடும் பனித்தோட்டம்
உன் பாதங்கள் தொட்டதும் பார்வைகள் பட்டதும்
பைந்தமிழ் பேசிடும் புல்க்கூட்டம்
உன் நாவினில் ஊறிடும் தேந்துளி உண்ணவே
திக்கென அலையுது தேனீக்கூட்டம்
உன் பொன்னிற மேனியை புடவைக்குள் பார்த்ததும்
புன்னகை சிந்திடும் நூல்க்கூட்டம்
உன் அன்பினை உணர்ந்ததும் பண்பினை அறிந்ததும்
கையெடுத்துக் கும்பிடும் ஆண்வர்க்கம் .........!!!
உன் காதடி ஓரத்தில் மின்னிடும் வேர்வைகள்
கண்களை மயக்கிடும் பனித்தோட்டம்
உன் பாதங்கள் தொட்டதும் பார்வைகள் பட்டதும்
பைந்தமிழ் பேசிடும் புல்க்கூட்டம்
உன் நாவினில் ஊறிடும் தேந்துளி உண்ணவே
திக்கென அலையுது தேனீக்கூட்டம்
உன் பொன்னிற மேனியை புடவைக்குள் பார்த்ததும்
புன்னகை சிந்திடும் நூல்க்கூட்டம்
உன் அன்பினை உணர்ந்ததும் பண்பினை அறிந்ததும்
கையெடுத்துக் கும்பிடும் ஆண்வர்க்கம் .........!!!

No comments:
Post a Comment