உயிரை உருக்கும் ஒருவார்த்தை
எப்படித்தான் நாம் ஒருவர் மீதான
அன்பையும் பாசத்தையும் கொட்டி
அரவணைத்து ஆறுதலாயிருந்தாலும்
ஒரு நிமிடம் ஏதோ ஒரு வகையில்
அவர்கள் பட்ட துன்பத்தை எண்ணி
நமக்கெனயாருமே இல்லையென்று
நம்மிடமே சொல்லும் போது தான்..
நமக்கே புரிகின்றது நாம் எதுவும்
இல்லையென்பதும் எங்களுடைய
கையாலாகத்தன்மையும்....
அந்த நிமிடம் நமக்கே நம்மீது வெறுப்பும்
விரக்தியும் உண்டாவதோடு எங்களின்
அன்பும் அதன் ஆளுமையும் எவ்வாறு
என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது !
No comments:
Post a Comment