Tuesday, 10 January 2017

உணர்வில் மலரும் உண்மைகள்



உண்மையொன்று சொல்லப்
போறேன் ஓடிவந்து கேளடி,
நான் சொல்வதெல்லாம் உண்மை
என்றால் ஒத்துக்கொண்டு செல்லடி

வகிட்டில் இட்ட முத்தமும் 
உதட்டில் பட்ட எச்சமும் 
எனை துரத்தி வந்து முட்ட
நெஞ்சை வருடி அள்ளி ஒட்ட

பட்டுமேனி தொட்ட நாணம் 
விட்டு என்னை போகல்ல 
கட்டில் மேலே வட்டம்போட்ட 
வெட்கம் இன்னும் தீரல்ல..

சட்டப்படி பார்க்கப்போனால்
பெரும் குற்றவாளி நீயடி
வெப்பப்பூவை தூவி என்னை
கொன்று தின்ற வெண்மதி..

இத்தனைக்கும் மேலும் இன்னும்
என்ன சொல்ல நானடி, இனியும்
ஏதும் சொல்லப் போனால், ஐயோ
எனது ஜீவன் ஏதடி.........................!!!

No comments:

Post a Comment