விட்டுப்போன காரணம்
எனக்கு சொட்டுக்கூட புரியல்ல,..
நான் தட்டுக்கெட்ட வேளையிலும்,
உனை விட்டுக்கொடுக்க முடியல்ல
சட்ட திட்ட மேதுமின்றி,
எனை வெட்டி விட்டதேனடி,
உனை கட்டித் தங்கம் என்று சொல்லி
ஒட்டிக் கொண்ட வீணோடி
பட்டாம் பூச்சி கூட்டத்திலுள்
கட்டெறுப்பு நானடி,
எனை சுட்டெரிக்கும் தீக்குமுன்னே
வந்து திட்டிவிடு செல்லடி

No comments:
Post a Comment