Tuesday, 10 January 2017

பேச்சில் கொல்லும் பேதையவள் ****



பேதையவள் பேச்சினிலே 
பெற்றெடுத்த மழலைதனை 
கல்லறையில் புதைத்துவிட்டு 
கண்ணீரால் கரைக்கின்றேன்

உறவென்னும் நாத்து நட்டு 
உயிர்வாளும் நெஞ்சினிலே 
அன்பெல்லாம் பொய்யென்றும் 
உல்லாசக் கூத்தென்றும்...

இதயத்தில் இடியொன்று
 இரட்டிப்பாய் விழுந்ததின்று 
துடியாய் துடித்த போதும் 
மரணித்துப் போகவில்லை

தருணத்தில் தான் சொன்ன 
சடுகுடு வார்த்தைகள்கூட 
மரணத்தை நியமிக்கும் 
மகுடிதான் ஆனதென்ன

மலைத்துப்போய் நிற்கின்றேன் 
மரணத்தின் வாசலிலே,
உனக்கு உலகெல்லாம் .......... என்ற 
அந்த ஒற்றை வார்தை கேட்டு....

No comments:

Post a Comment