Tuesday, 10 January 2017

தெரியாமல் என்னை திருடிவிட்டாள்



உத்தரவின்றி உள்ளே வந்த
சித்திரப்பெண்ணே........என்
நித்திரை திருடிப் போனது
உந்தன் வித்தகக் கண்ணே

ஒற்றையில் நின்று வித்தைகள்
புரிந்த செண்பகக் க(ன்)னியே, உன்
சத்துணவுத் திட்டம் சிந்தையில் 
மட்டும் எத்தனை சுவையே....

விதிதனைக் கொன்று மதியினால்
வென்று சதிராடும் கொடியே....
தெரியாமல் வந்து, ......... என்னை
அறியாமல் கொய்து,.....போனது
எனக்குப் புரியாமல் போச்சே.....!

No comments:

Post a Comment