Tuesday, 10 January 2017

ஆவியாகும் பாவியடி நீ ****


கண்ணாலே வலைவீசி
கனிவான கதை பேசி
முன்னாடி நீ நின்று,
பெரு மூச்சுவிட்ட தருணங்கள்

பின்னாடி தொடர்ந்து வந்து
என் கண்னாடி இதயத்தில்
கல்வீசிப் போவது போல் பொல்லாத
வலி ஒன்று கண்னோரம் வடியுதடா

உண்ணாமல் உறங்காமல்
உன்னாலே வாடுகின்றேன்
கண்ணாலே சொன்ன கதை
எனக்குள் கருவாகி துடிக்குதடா

முன்ஜென்ம பந்தமென்று
முழுசாய் நம்புகின்றேன்
முகத்தை பார்த்து விட்டு,
என் முடிவை முடித்திடுவேன்

அன்போடு நீ இருந்தால்
அன்றேனும் வந்துவிடு
ஆவியாய் அலையமுன்னே
பாவி என்னை பார்ப்பதற்கு

No comments:

Post a Comment