பிரியமுடியாப் பிரியங்கள் ****
பிரியத்தின் பிரியத்தால்
பிரிந்துபோ என்கின்றாய்
பிரிந்து நான் போகமுன்
பிரியுமே என் உயிர்
மருந்துதான் இதுவென்று
வருந்தி நீ உருகையில்
பொருந்துமா இதுவென்று
மறந்து நீ பேசிறாய்
விழியில் கண்ணீர் சொட்டுதே
எனை விரட்ட எண்ணி
திட்ட உதிரம் மண்ணில் கொட்டுதே
என்னை மரணம் வந்து தட்ட
அன்பே என்னை செத்துப்போ
என்றுசொல் ஒத்து போகிறேன்
உயிரே உன்னை விட்டுப்போ
என்றுசொல் செத்துப்போகிறேன்
No comments:
Post a Comment