Wednesday, 5 March 2014

படபடக்குது நெஞ்சு பாழாய்ப்போன நிலைகண்டு

கொதகொதக்கும் உலையினிலே
குறுக்கெழுதுப் போட்டியடா
படபடத்த நிலையினில் நான்
பதில் சொல்ல ஓடி வந்தேன்
புறுபுறுக்கும் உலகினிலே ...

அருவருக்கும் வாழ்க்கையடா
சொருசொருக்கும் மண்ணினிலே
விறுவிறென்று நடந்திடலாம்
கொழகொழென்ற பூமியென்றால்
புதைபுதையென்று புதைக்குமேடா
சட்டுப்புட்டென்று முடிவெடுத்து
கொட்டும் மழையிலும் சோறாக்கி
எட்டிப்பார்க்கும் ஏழைக்கெல்லாம்
கொட்டிக்கொடுத்து உறவாடு
உனை தட்டிக்கொடுக்க பலர் உண்டு
இல்லை முட்டி மோதிப் போராடு
பட்டினிச் சாவை மெல்ல கட்டிப்போடு
முடியாட்டி வெட்டிப்போடு..................!!!

No comments:

Post a Comment