Wednesday, 18 May 2016

விறுவிறுத்த நெஞ்சம் புறுபுறுக்குது.


திடுதிடுக்க ஓடி வந்து திருடன்
தான் அங்கு என்று படபடத்த
விழிகள் இரண்டு வழுவழுத்த
கதையைக் கண்டு

விறுவிறுத்த நெஞ்சம் கொண்டு
பொங்கி வந்த ஒருவன் இன்று
புறுபுறுத்த நிலையைக்கண்டு
பிரசுரித்தான் மழலை ஒன்று

கொழுகொழுத்து வளர்ந்த பிள்ளை
பளபளக்கும் மேனிகெண்டு தளதளக்கும்
தேகத்தோடு கொதகொதக்கும் உலையில்
விழுந்து விலை உயர்ந்தான் தன்னாலே !

No comments:

Post a Comment