Wednesday, 15 January 2014

உலகமே ஒரு கடன் காரன்

கடன் கடன் கடன் இங்கு எல்லாமே கடன்தான்
விண்ணுக்கு மண் கடன் மழைபொழிவதால்
கண்ணுக்கு நீர் கடன் கண்ணீர் வடிவதால்
சொல்லுக்கு வாய் கடன் வார்த்தை வருவதால்
உயிருக்கு உடல் கடன் உணர்வை கொடுப்பதால்...

இதயத்துக்கு வலி கடன் காதல் கொள்வதால்
செவிக்கு ஓசை கடை இசைகள் கேட்பதால்
கடன் பட்டார் உள்ளம் போல் கலங்கினான்
அன்று இலக்கியத்தில் இலங்கை வேந்தன்
இன்று என் இதயத்தை கொடுத்துவிட்டு கடன்
கேட்கின்றேன் என் வலிகளிடம் கவிகொண்டு
உன்னை தாங்கும் பூமியும் ஒரு கடன்காரன்
அது நாளை உன் உடலின் வரவுக்காக இன்று
உன்னை சுமக்கும் சிலகாலம் ......................... !!!

No comments:

Post a Comment