Wednesday, 15 January 2014

கவலைக்கு கண்ணீர் சொல்லும் ஆறுதல்

கவிதை எழுதுகின்றேன் கவிதை எழுதுகின்றேன் உன்
கண்ணீரை அறிந்து நான் கவிதை எழுதுகின்றேன்
காலத்தை நினைத்து கவலை கொள்வது ஏனோ
எனை தழுவும் காற்றுக்கும் உந்தன் கண்ணீ்ரை
சொல்லும் சக்தி உள்ளதை நீ அறியாயோ உன் ...

உள்ளம் பேசும் பாசையின் ஓசை என் காதில்
விழுகின்றது என் உயிரில் உந்தன் மூச்சுக்காற்று
தினமும் இசைக்கின்றது, காலம் எல்லாம் காவல்
இல்லை கவலை விட்டுவிடு இந்த உலகே அழியும்
போதிலும் எங்கள் கைகள் பற்றிக்கொள்ளும் உன்
சோகம் தீர நானும் இங்கே தவங்கள் செய்திடுவேன்
அந்த தவத்தின் வலுவின் பொருளை எடுத்து உனக்கே
தந்திடுவேன் இதுகும் நன்மைக்கே என்று நினைத்துவிடு..!

No comments:

Post a Comment