Wednesday, 15 January 2014

மழையை ரசிக்கும் மயில்குஞ்சு

பூனைக்குட்டியை மடியில் வைத்து
புன்னகையை உதட்டில் தைத்து
வாழைப்பூவை தலையில் சுமந்து
மழைத் துளியை ரசித்திருக்கும் என்
மயில்குஞ்சே உன் மடிமீது நானுறங்க...

என்ன தவம் செய்வேனடி.... உந்தன்
இதழ்களை நீ அசைத்து எனை ஓரக்
கண்ணால் நோக்கமிட்டால் என் பஞ்சு
நெஞ்சினில் பூவாணம் பிஞ்சு மேனியில்
தூவாணம். உன்னை கெஞ்சுகின்றேன்
ஏன் இந்த மாயம் நான் ரொம்ப பாவம்,

மயில்குஞ்சு மழையில் நனையுது ஐயோ
என் மனதில் ஏதோ அலைகள் அடிக்குது !!!

No comments:

Post a Comment