Monday, 12 November 2012

பணம் தேடும் இயந்திரங்கள் !



நாம் இயந்திராமாய் வாழுகின்றோமே
தினம் மின்சாரமாய் பாய்கின்றோமே
காலையில் எழுந்தவுடன் கடிகாரத்தை
முறைக்கிறோமே, கெட்டும் பட்டணம்
போவென்று சொன்னவனும் இங்கே

கெட்டுப்போன கதைகள் தான் பல உண்டு
கொட்டும் பனியில் ஒட்டடை தட்டுறோமே
கொளுத்தும் வெயிலில் கோபுரம் ஏறுறோமே
பாலைவனத்திலே ஒட்டகம் மேய்க்கின்றோமே
நாள்தோறும் உழைக்கிறோமே, வேளை
வரும் என நி்னைக்கிறோமே இது என்னடா
வாழ்க்கை என்று ஏங்கித்தவிக்கிறோமே
திரிபோஷமாவையும் ஒடியல்பிட்டையும்
அன்று அன்போடு அம்மா ஆக்கிப்போட்டாலும்
ஆவேசத்துடன் அடி மனதில் திட்டி தீர்த்தோமே
ஆசையோடு அப்பா ஆறுதல் சொன்னாலும்
அவரைப் பார்த்தும் ஆத்திரம் கொண்டோமே
கட்டுங்கடங்கா காளையாய் திரிந்தோமே
ஏன் என்று கேட்பவனை எட்டி உதைத்தோமே
வெட்டிவிடு உறவையென வீராப்பாய் சொன்னோமே
இப்போ தீக்கிரையான தீனியைத்தான் தின்கிறோமே
விட்டுப்போன உறவை தொட்டிட துடிக்கிறோமே, அடே என்பவனை அண்ணா என்றோமே, தறுதலை என்று நினைப்பவளையும் நாங்கள் தங்கையென அழைக்கிறோமே,.... இது என்ன கொடுமையடா
இதை எங்கே சொல்வேனடா...??? எதையெல்லாம் இழந்தாலும் ஏங்கித்தவித்தாலும் இங்கேயும் ஒரு நல்லது நடப்பதை நான் கண்டு மகிழ்கின்றேன்
தீண்டத்தகாதவன் என தள்ளி வைத்து உணர்வுக்கு
கொள்ளி வைக்காமல் பள்ளி பிள்ளைகள் போல்
கிள்ளி விளையாடுகிறோம் கூடி உறவாடிகிறோம்... !

No comments:

Post a Comment