Monday, 12 November 2012

பூர்வ ஜென்ம பந்தம் !



புல்லாங்குழலே என் பூர்வஜென்ம
பந்தமே, உன் புன்னகை கண்டு
எத்தனை நாட்களடி, உன்
பூச்சொரியும் வார்த்தை கேட்டு
எத்தனை காலமடி...?

நீ இல்லாத பொழுது எனக்கு
இருளாகிப்போனதடி என்
இதயத்துடிப்பில் இடைவெளி
கூடுதடி...........
நான் இருந்தும் மெல்லத்தினம்
இறந்துதான் போறேனடி
என் உயிரின் ஒளியே நீ என்னதான்
செய்வாயோ எனக்குத் தெரியாது
உன்னுயிர் இங்கே உருக்குலைந்து
போகமுன்னே என் உயிரோடு கலந்து
உறவாட வருவாயோ.................?????

No comments:

Post a Comment