Thursday, 21 June 2012
உன் கடைசி ஆசை என்ன ..??? ***
நெஞ்சு வெடிக்குதடி அன்பே
நீ என்னை வெறுக்கையிலே
உயிரு துடிக்குதடி உயிரே
நீ பேசாது இருக்கையிலே
உள்ளம் வலிக்குதடி உணர்வே
நீ உருகித் தவிக்கையிலே
இறந்து போய்விடு என்று
மனசு சொல்லுதடி, இல்லை
தேவதை வருவாள் உந்தன்
சோகத்தை தீர்ப்பாள் என்று
புத்தி மறிக்குதடி, என் உறவில்
கலந்த உன்னதமே இனி என்
வாழ்வு உன் வசமே நீ எனை
என்ன செய்யப் போகின்றாய்,
போடா மடையா என்று எனை
சாகவிடுவாயோ இல்லை சாபமிடுவாயோ
பாப்பா நான் என்று உன் பாசம்
நடிப்பென்று பாவி நீ சொன்னதுமே
பாதி உயிர் போனதடி, மன்னிப்பு நீ
தந்து மன்னவனாய் ஏற்காவிடில்
மீதி உயிரும் இன்று உந்தன்
நினைவோடு பிரியுமடி,,
பாவம் செய்த நான் பாடையிலே
போகையிலே, மறந்து கூட நீ
பாசம் காட்டி எனை பார்க்க
நினைக்காதே, உன் வேசக்காரன்
இந்த உலகை விட்டு போகட்டும்
தேவதை உன் வாழ்வு இனியாகின்
தேனாய் இனிக்கட்டும் ................... !!!
உன் கடைசி ஆசை என்னவென்று
நீ கேட்டால்....????
என் கல்லறையில் வந்து மன்னித்தேன்
என்று சொல்
என் ஆத்மா அன்றே அமைதியாக உறக்கம்
கொள்ளும் ....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment