Thursday, 21 June 2012

முகம் காட்ட மறுத்தவள் ***



உன் முகம் பார்க்க முடியாது மறைத்தாயே

என் முகவரியில் நட்பாக நுழைந்தாயே
உன் கவியாலே எனை மெல்ல ஈர்த்தாயே
என் கருத்தாலே உனை போற்ற வைத்தாயே
உன் பண்பாலே தனியாகத் தெரிந்தாயே
என் அகம் எல்லாம் முழுதாக நிறைந்தாயே
உன் வம்பாலே எனை தினம் வதைத்தாயே
என் அன்பாலே அதை கூட அணைத்தேனே
உன் உயிர் என்று எனை சொல்லி மகிழ்ந்தாயே
என் உடலுக்கு உயிரான வரமாக வந்தாயே
என் உணர்வோடு உணர்வாக கலந்தாயே
இனி நீயின்றி நான் ஏது என் தாயே ......?????



No comments:

Post a Comment