Thursday, 10 March 2016

புத்திக்கும் பக்திக்கும் அவள் தனி


தித்திக்கும் தேன் மொழியாள்
பத்திக்கும் விழி ஒளியாள்

குத்திக்கும் குரல் இசையாள்
முத்திக்கும் தனி உடையாள்

புத்திக்கும் விடை கொடையாள்
தத்திக்கும் நடை அழகாள்

மத்திக்கும் நிலை குலையாள்
எந்த சக்திக்கும் தலை குனியாள்

அந்த கத்திக்கும் இவள் மிரளாள்
அவளே எந்தன் குலவதுவாள்...!

No comments:

Post a Comment