Monday, 7 March 2016

என்னவளுக்கு ஒரு செய்தி

    இலங்கையில் வெளியாகும் சுடர் ஒளியின் இன்னொரு
    வெளியீடான ஒளி அரசி மகளீர் மாதச் சஞ்சிகையில்
    எனது கவிதை வெளிவந்துள்ளது.

    சிறந்த கவிதைகளை தேடி எடுத்து அவர்களை பாராட்டி வாழ்த்துவது மட்டுமின்றி கவிதைகளையும் பத்திரிகையில் பிரசுரித்து மகிழ்ந்து நிற்கும் இந்த நல் உள்ளங்களை நான் என்ன சொல்லி வணங்க, பல சமுக நலம் பேணும் அறிவுபூர்வமான நிகழ்வுகளை தாங்கி வரும் இப்பத்திரிகை மேலும் மேலும் பல சாதனைகள் புரிய என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் கூறுவதோடு மட்டுமின்றி என்னை தேடி எடுத்து என் கவிதைகளை பிரசு...ரித்து மனதார வாழ்த்திப் பாராட்டும் (குறிப்பாக என்னைக் கண்டெடுத்த) இந்த இரு அன்புறவுகளுக்கும் என் நன்றியை வணக்கத்துடன் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றேன்.வாழ்க வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் நல் தொண்டு.
    ** எனக்கு அனுப்பிய வாழ்த்து மடல் **
    என் தாய்த்தேசம் பெற்ற கவி மகனே
    நீ----கவிஞனா அல்லது கடவுளா..?
    உன் கவியின் நயம் கண்டு சிலிர்த்துப்
    போனோம். உன் தமிழ்ப் புலமைக்கு
    தலை வணங்குகின்றோம். இப்படியொரு
    கவியை இது வரை கண்டதில்லை.
    காதலின் மனமதனாய் மார்க்க பேதங்களின்
    பாரதியாய் தத்துவத்தின் கவிஞனாய்
    எல்லாமாய் பிரசவிக்கிறாய் கண்ணன் கண்ணராசனாய்.

No comments:

Post a Comment