Wednesday, 18 July 2012

இதயத்தில் கருவாகிய என்னவள் ***




அன்னாசிப்பழம் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம்
பப்பாளிப்பழத்தை பார்த்தாலே எனக்கு வாயூறும்
ஆனால் இதையெல்லாம் உண்டால் கருக்கலையும்
என்று என் பாட்டி அன்று சொன்னதால் இன்று
அன்னாசிப்பழத்தை நான் அடியோடு வெறுக்கிறேன்
பப்பாளிப்பழத்தை எனக்கு பார்த்தாலே பிடிக்கவில்லை
காரணம் இவற்றை உண்பதால் என் இதயத்தில்
கருவாகி குழந்தையாய் தவழும் என்னவள்
கரைந்துவிடுவாளோ என்று பயம் கொள்வதால்

No comments:

Post a Comment