மருத்துமனையில் என் மனதில்
பட்டதை கருத்தினில் கொண்டு
சிறு கவியாய் வடிக்கின்றேன்.....
இங்கே பார்ப்போர்கள் எல்லாம்
பரிதாப நிலையில் , ஐயஹோ
தூக்கத்தை இழந்து துடிப்போர்
உண்டு
ஏக்கத்தில் தன்னை மறப்போர்
உண்டு
தாக்கத்தில் வாடும் தனிமையும்
உண்டு
தாயைப்போலே பாசம் காட்டும்
தங்கை என்னும் தாதிகள்
உண்டு
பேயைப்போலே நோயைக் கூட
விரட்டி அடிக்கும் வைத்தியர்
உண்டு
மூச்சு நிற்கும் பேச்சும் உண்டு
இதயத்துடிப்பின் சத்தம் உண்டு
இதயம் துடிக்கும் சந்தம் உண்டு
வாழத்துடிக்கும் மனங்கள் உண்டு
வாழ்வைத் தொலைத்த நெஞ்சம்
உண்டு
எத்தனை எத்தனை தத்துவங்கள்
நித்தமும் கண்களில் மின்னுதடா
அத்தனை வண்ணமும் நான் கூற
பித்தமும் தலைக்கு ஏறுதடா.......
பசிவந்தால் பத்தும் பறந்திடும்
நோய் வந்தால் அந்தப் பசியே
மறந்திடும் ..
இதுதாண்டா வாழ்க்கை இதில்
நமக்கு ஏண்டா வீண் ............................???
பட்டதை கருத்தினில் கொண்டு
சிறு கவியாய் வடிக்கின்றேன்.....
இங்கே பார்ப்போர்கள் எல்லாம்
பரிதாப நிலையில் , ஐயஹோ
தூக்கத்தை இழந்து துடிப்போர்
உண்டு
ஏக்கத்தில் தன்னை மறப்போர்
உண்டு
தாக்கத்தில் வாடும் தனிமையும்
உண்டு
தாயைப்போலே பாசம் காட்டும்
தங்கை என்னும் தாதிகள்
உண்டு
பேயைப்போலே நோயைக் கூட
விரட்டி அடிக்கும் வைத்தியர்
உண்டு
மூச்சு நிற்கும் பேச்சும் உண்டு
இதயத்துடிப்பின் சத்தம் உண்டு
இதயம் துடிக்கும் சந்தம் உண்டு
வாழத்துடிக்கும் மனங்கள் உண்டு
வாழ்வைத் தொலைத்த நெஞ்சம்
உண்டு
எத்தனை எத்தனை தத்துவங்கள்
நித்தமும் கண்களில் மின்னுதடா
அத்தனை வண்ணமும் நான் கூற
பித்தமும் தலைக்கு ஏறுதடா.......
பசிவந்தால் பத்தும் பறந்திடும்
நோய் வந்தால் அந்தப் பசியே
மறந்திடும் ..
இதுதாண்டா வாழ்க்கை இதில்
நமக்கு ஏண்டா வீண் ............................???

No comments:
Post a Comment