Tuesday, 15 May 2012

பாப்பாக்கு ஒரு கவிதை..!!! ***


காற்றிலே மிதக்கின்றேன் .
காகிதமாய் பறக்கின்றேன்
உருவம் இல்லா ஓவியத்தை
இதயத்திலே சுமக்கின்றேன்
மாலையில் சிரிக்கிறேன்
மயக்கத்தில் துடிக்கிறேன்
காலையில் .அழுகின்றேன்
கண்கலங்கி நிற்கிறேன்
மாதுளம் பூவே என் மனதை
நீ அறியாயோ
பூலோகத் தேவதையே என்
புலம்பல் கொய்வாயோ
தேகம் சிலிர்க்கும் தேனமுதே
என் தேவைகள் புரியாதோ
காற்றில் வந்த காவியமே
என் கையில் தவழாயோ
பாப்பா பாப்பா என்று உனை
பாசத்தோடு அழைக்கின்றேன்
ஏம்பா ஏம்பா என்று என்னை
தாவி அணைப்பாயோ...........???

No comments:

Post a Comment