Thursday, 24 May 2012

என் கதையே கவிதையென்றால் !!! ***



அவள் திட்டினாலும் ரசிக்கிறாள்
நான் கத்தினாலும் ருசிக்கிறாள்
முத்த மழை பொழிகிறாள்
நித்தம் எனை வதைக்கிறாள்
குழந்தை போலே சிரிக்கிறாள்
கோபம் கொண்டால் துடிக்கிறாள்
உயிரே என்று அழைக்கிறாள்
உரிமையுடன் முறைக்கிறாள்
மாமோய் என்று மகிழ்கிறாள்
மனசை மெல்ல வருடுறாள்
கதைக்க சொல்லி கெஞ்சிறாள்
என் கதையே கவிதையென்கிறாள்
அன்பே உந்தன் அன்பாலே நான்
இன்று தும்பு போலே ஆனேனே........!!!

No comments:

Post a Comment