Saturday, 26 January 2013

என் கதவை தட்டிய சொர்க்கம் அவள்


சொர்க்கத்துக்கு அழைப்பிதழ் சொல்லாமல்
கொடுத்தது யார்
என் வீட்டு கதவுதனை வந்து கேட்காமல்
தட்டுது ஏன்
தேவதையை தேரில் வைத்து என்னிடத்தில்
அனுப்பியது யார்
சிந்துகின்ற அவள் உமிழ்நீர் நாவில் தேனாக
சுவைப்பது ஏன்
காமன் அவன் அம்பு தனை என் நெஞ்சினிலே
பாய்த்தது யார்
கவி படைக்க வந்த நானும் கதிகலங்கி
நிற்பது ஏன்
என் மதி மயங்க வைத்தவளே உன் விழி வழியே
பாயும் அம்பு
எனை மொழிமறக்க வைக்குதடி உன் சிற்றிடையின்
நடனம் கண்டு
நானோ சிட்டெறும்பாய் மாறி பனங்கட்டியாக எண்ணி
உனை உண்டு உறவாடுகின்றேன் .. !

No comments:

Post a Comment