Saturday, 26 January 2013

உன்னதமும் நீயே என் பொற்பதமும் நீயே





உன்னதமே என் உள்ளம் கொள்ளை
கொண்டவளே
சின்னவளே என் சிந்தனைக்கு வித்தாக
வந்தவளே
விளையாட்டுத்தனத்தாலே விழியில் அருவி
படைத்தவளே
உன் அறியாமையால் என் நெஞ்சில் அம்பை
பாய்த்தவளே
சிறு ஊடல் கூட எனக்குள் எரிமலையாக
வெடிக்குதடி
என் ஆயுள் ரேகை நீயடி உன் ஆயுள் கைதி
நானடி
உத்தமமே பொற்பதமே சொர்ப்பனமே என்
சொந்தமே
என் கண்ணுக்குள் ஏந்தினால் நான் தூங்கும்
போது உனக்கு
மூச்சுமுட்டுமேயென அஞ்சி என் இதயத்துக்குள்
ஒழித்தேனடி....
நான் உன் தொட்டால்சிணுங்கி தானடி நீ தொடமுன்
சுருங்கிறாய் ஏனடி .....?

No comments:

Post a Comment