Saturday, 26 January 2013

மாயம் போன நெஞ்சும் சாயம் போன சேலையும்



என்னுயிரே என் நிலையும்
உன் நிலையும் ஒன்றோடி 
உயிரும் உயிரும் ஒன்றாய்
சேர்ந்து உரசிக்கொள்ளுதா 

தொண்டைக்குழியில் ஒற்றை 
வார்த்தை சிக்கித்தவிக்குதா 
உதட்டின் மேலே ஊறும் எச்சி 
ஏனோ வறண்டு போகுதா

தொட்டுத் தழுவாத போதும் 
நெஞ்சில் மொட்டு மலருதா
கட்டியணைக்காமல் மேனி 
வேர்த்துக்கொட்டி உச்சி கூசுதா

கண்ணை மூடித்தூங்கும் போது 
எந்தன் வாசம் தட்டியெழுப்புதா
சொர்க்கவாசல் கதவைத் திறக்கும்
சாவி எங்கள் முத்தமானதா

மொத்த உணர்வைக் கேட்டு உந்தன்
பட்டுச்சேலை சாயம் போகுதா 
எனக்கானவளே உன்னவனின் 
உணர்வில் உண்மை உள்ளதா 

உண்மையென்றால் ஓடிவந்து 

ஒட்டிக்கொள்ளவா

No comments:

Post a Comment