Tuesday, 9 February 2016

கொள்ளி வைக்கும் மெல்லினம்

    பூவே தளிரே என் பூங்கொடியே
    தேனே அமுதே தேன்மொழியே
    அன்பே அழகே என் அரும்சுடரே ..

    மாடப்புறாவே என் மஞ்சள்நிலாவே ...
    தென்றல் காற்றே தென்னம் கீற்றே
    மாலை கதிரே என் மயிலிறகே

    சோலை குயிலே என் சொர்ப்பனமே
    குத்துவிளக்கே குண்டு மல்லியே
    வெட்டி எடுத்த என் வெண்பனியே

    கொட்டிக்கிடக்கும் என் நவமணியே
    எனை வெட்டி மடிக்கும் மெல்லினமே
    தட்டி கழிக்கும் என் வல்லினமே

    ஏனிந்தத் தலைக்கனம் என்னிடமே
    தவணை முறையில் கொல்லிறியே
    தவிப்பில் தினமும் சாகின்றேனே...

    வெட்கத்தை கொஞ்சம் ஒத்தி போடு
    முத்தத்தால் என்னில் கோலம் போடு
    சொர்க்கத்தில் என்னை கட்டி போடு

    இல்லை உன் பக்கத்தில் என்னை
    வெட்டிப்போடு .............!!!

No comments:

Post a Comment