என் எல்லாமானவளே... !
பிரக்கடிக்கும் பிள்ளைக்கு முதுகில் தட்டி
ஆறுதல் சொல்லும் தாயை போல் என்
தடுமாற்றங்களை எல்லாம் தட்டி விட்டு
என்னை தாங்கிப்பிடிக்கும் தந்தையாய்
சோகத்தை துரத்தும் தோழியாய் தாக்கத்தை
போக்கும் ஏணியாய் பாசத்தை பாலாக ஊட்டி
விவேகத்தை சீராகக் காட்டி என்னை வழி
நடத்தும் குருவாய் வந்தவளே என் வாழ்வே
உன் காலடியே என் உலகம் என்றும் எனை
காத்திடும் அன்னை என நான் காலமெல்லாம்
கவிபாட உந்தன் கருணை எனக்கு வேண்டுமடி...!!!
No comments:
Post a Comment