Tuesday, 20 March 2012

காரணம் தெரியாக் குழப்பம்

கவிதை கேட்கிறாள் கன்னியவள்
எழுத முடியவில்லை எண்ணியதை
புலம்பித் தவிக்கிறேன் சொல்லி அதை
காரணம் புரிய மறுக்கிறாள் கள்ளியவள்
மனசை உறுத்துதே அவள் சொல்லியதில்
அறிந்தும் ஏன் வைக்கிறேன் கொள்ளியதில்
குழப்பி விடுவதில் பெரும் புள்ளியவள்
குழம்பி நடக்கின்றேன் நான் புல்வெளியில்.......!!!

No comments:

Post a Comment