Wednesday, 21 March 2012

மயங்காதே மனிதா

மானிட வாழ்வினில் மயக்கங்கள் தான் ஏனோ
மன்மத பானங்கள் பாய்வதால் தானோ,
மந்திரம் போட்டு மாய்ப்பவர் பலர் உண்டு
மனதினை காட்டி ஈர்ப்பவர் சிலர் உண்டு,
வேதனை தருவதில் வேடிக்கை பலருக்கு
சோதனை புரிவதில் சொர்க்கங்கள் சிலருக்கு
அன்பினை கொடுத்து வம்பினை நீக்கி
பண்புடன் வாழ வழியேதும் உண்டோடா.............????



No comments:

Post a Comment