Wednesday, 14 March 2012

அலை பாயும் மனது ***


கன்னியின் மனசோ அலைபாயுது
காளையின் உறவில் பிளவானது
இதயத்தில் காதல் உரமானது
உதட்டில் வந்தும் தடுமாறுது
உயிரை உருக்கும் வலியானது ஊமை கண்ட கனவானது
இனிப்பாய் பேச மறுக்கின்றது
இருட்டில் நின்று தவிக்கின்றது
இனிமேலும் இதயத்தில் பொறுமையில்லை
இளைப்பாற மனசுக்கு தெரியவில்லை
முன்னோர்கள் பின்னிவைத்த வலையில் சிக்கி
முடிவெடுக்க முடியாமல் துடிப்பதென்ன
 காலைப்பற்றிக் கேட்கின்றேன் கருணை கொஞ்சம் காட்டாயோ
விடைபெறுகின்றேன் உனக்குள் இருந்து
விழியைத் திறந்து வழிவிடு இன்று............



No comments:

Post a Comment