Wednesday, 14 March 2012

அடங்காத ஆசைகள்



அடங்கிட மறுக்கும் ஆசையின் மனம் தான்
தொடங்கிட துடிக்கும் நம்பிக்கை மனம் தான்
நடப்பது எல்லாம் நாடக மனம் தான்
கிடைப்பது என்றும் கேள்வியின் மனம் தான்
மண்மேலே தோன்றும் மனம் எல்லாம் அன்பைத் தேடும் நாளும்
அன்பாலே ஆன மனம் என்றும் உன்னை என்னை ஆளும்
கொட்டிக்கிடக்குது கோடி மனங்கள் சட்டென பட்டதை தேடி எடுங்கள்.
எத்தனை மனங்கள் பூமியிலே உன் மனம் போலே எதும் இல்லை

No comments:

Post a Comment